நதிநடக்க மறுத்தாலும்...
வெள்ளம் நிற்காது!
தேதிகிழிபட உடன்படாவிட்டாலும்
அடுத்த தினத்தைத்தடுக்க...
யாரால் முடியும்?
கிளை ஒன்றை வெட்டிய உனக்கு எதிராக...
வேர்களின் தீர்மானத்தில் நூறு கிளைகள்
நிறைவேறும்!
குழல்களை உடைத்தெறிவது சுலபமாகலாம் உனக்கு!
காற்றில் கலக்கும் இசையைக்காயப்படுத்த
முடியுமா?
கண்களைஇறுகக் கரங்களால் நீமூடிக்கொண்டாலும்...
உண்மைகள்இருண்டு
போவதில்லை!
நாட்குறிப்பேட்டில்ஞாபகங்களை அழித்துவிடலாம் நீ!
மனத்தில் அவை ஊன்றியவிதைகளை
எந்தவிரல்களால் வெளியேஎடுத்து
எறிவாய்?
வினா எழுப்பும் மனச்சான்றை நாடு கடத்தி விடலாம்!
ஆனால் அது,உன் ஆன்மாவின் கதவைத்
தட்டுமே ஒருநாள்...!
அப்போது என்ன செய்வாய்?
சோகம் மட்டுமே வாழ்க்கை அல்ல அதை தொடர்ந்து வாழ்க்கையில் ஜெயம் கொள்ள துடிக்கும் துடிப்பே வெற்றி............ அதுதான் ஜெயம்.....