Saturday, February 23, 2008

என் காதலி...




நீ வாசல் கடக்கையில்கவர்ந்த வாசனையைபூசிக் கொண்டு மலர்கிறதுகொல்லைபுற மல்லி!

உயிரற்ற செல்களலாக்கப்பட்ட உரோமங்கள்உயிர் பெற்றுகுத்தாட்டம் போடுகின்றன;உன் தாவணி ஸ்பரிசத்தில்!

தென்றலை ஒத்தநடைபயின்று கடந்துச் செல்கிறாய்;ஆயிரம் சூறாவளிகளைஎன்னுள் உருவாக்கிவிட்டு!

என்னுடன் ஓடிவருவதானால் -வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!உன்னோடு இருபது வருடம்வாழ்ந்த அதனோடுஇருபது நாட்களாவதுவாழ வேண்டும் எனக்கு!

தலை சூட நீ மல்லி சேகரிப்பதுப் போல;என் உயிர் சூடஉன் புன்னகை சேர்க்கிறேன்நான்!

No comments: